உள்நாட்டு செய்திகள்

அக்மீமன பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் தவறு செய்யவில்லை

(FASTNEWS|COLOMBO) – காலி – அக்மீமன – மணவில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய், தவறு செய்யவில்லை என்று ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிசாரும் இராணுவமும் தனித்தனியாக இது தொடர்பாக விசாரணை நடத்தி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட சிப்பாய் தற்போது பூசா இராணுவ முகாமில் காவலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் ஆண்டு விழாவில் போதையூட்டும் பொருட்களை எடுத்துவரத் தடை..

wpengine

தாஜுதீன் கொலை – டக்ளஸின் அலுவலக சி.சி.டி.வி. பதிவுகளை சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க நடவடிக்கை

wpengine

இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்பட மாட்டாது..

wpengine