உள்நாட்டு செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணம் 5 மடங்கால் அதிகரிப்பு.

அதிவேக நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளுக்கு ரூ.5000 அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகக்கட்டுப்பாட்டை மீறி செலுத்தப்படும் பஸ்களுக்கு தற்பொழுது ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகின்றது.

இந்த அபராதத் தொகையை ரூ.5000 உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து ஆணைக்குழுவின் எம்.ஏ.ஜீ.ஹேமசந்திர  தெரிவிக்கையில், கடந்த சில தினங்களில் வேகக்கட்டுப்பாட்டை மீறிய 30 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் இருவர் சிக்கினர்

Azeem Kilabdeen

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் பூட்டு

wpengine

கண்டி கலவரம் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு – ஹர்ஷ..

wpengine