உலக செய்திகள்

அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீப காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ’வன்முறை அச்சுறுத்தல்கள்’ வந்ததாக தெரிவித்த பொலிசார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர்.

மேரிலாண்டில் வசிக்கும் 30 வயதுக்கு மேல் உடைய ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கிரனேட் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் தனது பையில் அவர் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற கட்டடத்திலிருந்து 170 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

8 வடகொரியா வங்கிகள் மீது அமெரிக்க அரசு தடை விதித்தது …

wpengine

உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும்

wpengine

ஜப்பானில் நிலநடுக்கம்…

wpengine