உலக செய்திகள்

அமைதிப்படைக்கு பரிசாக இரண்டு இலட்சம் தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் |நியூயோர்க்) – ஐ.நா. அமைதிப்படைக்கு இந்தியா 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்கியதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருகிற ஐ.நா. அமைதிப்படையினரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இந்தியா 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்கும்” என்று அறிவித்தார்.

இதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், “இந்தியாவின் இந்த பரிசுக்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்த தடுப்பூசியை விநியோகிக்கும் திட்டத்தை ஐ.நா. ஆதரவு துறை மேற்கொள்ளும்” என தெரிவித்தார்.

ஐ.நா. அமைதிப்படையில், அமைதி ஏற்படுத்தும் 12 நடவடிக்கைகளில் 94 ஆயிரத்து 484 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச மன்னிப்புச்சபையினால் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருது மீளப்பெறப்பட்டது…

wpengine

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்…

wpengine

ஜனாதிபதி தேர்தல் மோசடி – ரஷ்யா மீது விசாரணை செய்ய ஒபாமா உத்தரவு..

wpengine