உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்கார்ட் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிஷங்க ஆணைக்குழு முன்னிலையில்

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிஷங்க சேனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ன ஆகியோர், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் ஒழிப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ரக்னாலங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ரவைகளை அவன்கார்ட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 19ம் 20 ஆம் திகதிகளில் அவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

ரூமி முஹமத் CID இல் சற்றுமுன் சரண்

wpengine

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

Azeem Kilabdeen