உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர் ஓய்வறைக்குள் 15 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம் – இராணுவ சிப்பாய் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திற்பனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஓய்வறைக்குள வைத்து 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 24 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை திற்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த மாணவி தனது தாயிடம் தெரிவித்ததனையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து இராணுவ சிப்பாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை திற்பனை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இன்று விசேட சந்திப்பு…

wpengine

மாலிங்க மீண்டும் அணிக்கு – மாலி குறித்து திலான் வெளிப்படைக் கருத்து…

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 131 சாரதிகள் கைது

wpengine