உலக செய்திகள்

ஆசிரியர் கொலை – 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | சூடான்) – காவலில் இருந்த ஆசிரியர் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு சூடான் நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்நாட்டின் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 36 வயதான அஹமத் அல்-கைர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த நிலையில், அவர் கடந்த பெப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

சூடானின் கிழக்கு பகுதியில் உள்ள கஸாலா என்ற மாநிலத்தில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் அஹமத் அல்-கைர் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.

29 புலனாய்வு அதிகாரிகளுக்கும் தண்டனை அறிவித்த நீதிபதி, உயிரிழந்த அல்-கைரின் சகோதரரிடம், அவர்களை மன்னிக்க விரும்புகிறீர்களா அல்லது அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா என வினவ அதற்கு அந்த சகோதரர், 29 பேரையும் தண்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related posts

சவுதி தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு

wpengine

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பு

wpengine

பிரஸ்ஸல்ஸ் குண்டு வெடிப்பு – ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

wpengine