உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிரிய அதிபர்கள் சுகயீன விடுமுறைக்கு ஆயத்தம்

(FASTNEWS | COLOMBO) – அரச பாடசாலை அதிபர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி ஜூலை மாதம் 18,19 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச ஆசிரியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அரச ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் செஹான் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதிலுமுள்ள ஆசிரியர்களும், அதிபர்களும் ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இப்போராட்டத்துக்கு தீர்வு கிட்டவில்லையாயின் பாடசாலை இரண்டாம் தவணைக் காலப் பகுதிக்குள் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

கஜா புயல் – 700 குடும்பங்கள் பாதிப்பு…

wpengine

இன்றைய வானிலை அறிக்கை

wpengine