விளையாட்டு

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முகாமையாளரும் இராஜினாமா

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ராஜினாமா செய்துள்ளார். யூரோ 2016 கிண்ணப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து இவ்வாறு பதவி விலகியுள்ளார். ஐஸ்லாந்து அணியிடம் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.

68 வயதான Roy Hodgson தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்தின் முகாமையாளராக Roy Hodgson  கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விக்காக மன்னிப்பு கோரிய ஹொட்கசன், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வழமையானது என அவர் தெரிவித்துள்ளார்.

பலம்பொருந்திய இங்கிலாந்து அணி பலவீனமான ஐஸ்லாந்து அணியிடம் நொக்அவுட் சுற்றில் 2க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து அணி முக்கிய போட்டித் தொடர் ஒன்றில் சாம்பியன் பட்டம் வெல்வதனை தாம் எதிர்பார்த்து காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

4வது ஒருநாள் போட்டியிலும் கோட்டை விட்டது இலங்கை அணி..

wpengine

சகதுறை வீரர் வனிது ஹசரங்க நீக்கம்

wpengine

உலகின் முதல்தர சுழல்பந்து வீச்சாளருக்கு போட்டித் தடை…

wpengine