உலக செய்திகள்விசேட செய்தி

இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநில ரயில் விபத்தில் இதுவரை 23 பேர் பலி, 60 பேர் காயம்..

இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இதுவரையில் 23 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(19) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், புகையிரதத்தின் 14 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ படைகள் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, புகையிரத உயரதிகாரிகளும் களத்தில் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 இலட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என இந்திய ரயில்வே போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

நேபாளத்தில் தொடரும் கடும் மழை – 9௦பேர் பலி

wpengine

வகுப்பறை இடிந்து விழுந்த விபத்தில் 07 குழந்தைகள் உயிரிழப்பு

wpengine

சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது- ஜீ ஜின்பிங்

wpengine