உலக செய்திகள்

வூஹான் சென்ற எயார் இந்தியன் 324 பயணிகளுடன் தரையிறக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – வுஹானில் இருந்து 324 பயணிகளுடன் எயார் இந்திய விமானம் டெல்லியில் தரையிறங்கியுள்ளது. 

எயார் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று நேற்று(31) சீனாவின் வூஹான் பிராந்தியத்துக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வூஹான் பிராந்தியத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானம் சீனாவை நோக்கி நேற்று பகல் பயணித்துள்ளதுடன், இந்த விமானத்தில் 400 பயணிகளை அழைத்துவரும் வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த விமானத்தில் 5 வைத்தியர்களும் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எல்சல்வடார் முன்னாள் ஜனாதிபதிக்கு 10 வருட சிறை…

wpengine

நேற்றிரவு பெய்த கடும் மழைக்கு 12 பேர் உயிரிழப்பு…

wpengine

பின்லேடனின் மரண சான்றிதழை அமெரிக்காவிடமிருந்து கோரிய மகன்

wpengine