உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, வட-மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் வேறு பாகங்களிலும் குறிப்பாக மாலை அல்லது இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலையிலும் மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

விளக்கமறியலில் உள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அஸ்கிரிய பீட சங்க சபை கோரிக்கை..

wpengine

ரமழான் காலப்பகுதிக்கான சுகாதார ஒழுங்குவிதிகள்

wpengine

ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

wpengine