உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05, 11,13 ஆம் தரங்களை தவிர்ந்த ஏனைய தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

இதற்கமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையிலும் தரம் 06 தொடக்கம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்று திறக்கப்படும் பாடசாலைகள் யாவும் சித்திரைப்புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா அறிவித்துள்ளார்.

Related posts

காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றம் (UPDATE)

wpengine

கிழக்கு மாகாண படை வீரர்கள் கௌரவிப்பு விழா

wpengine

போதைப்பொருள் குறித்து உடனடியாய் அறிவிக்க என்னை அழையுங்கள் – பொலிஸ் மா அதிபர்

wpengine