உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இன்றைய கிரிக்கெட் போட்டியில் ஒலிச் சத்தங்களுக்கு தடைவிதிப்பு..

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணியினருடனான இன்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் புல்லாங்குழல், ஹோர்ன் ஒலி மற்றும் ஹூட்டர்ஸ் போன்ற ஒலி எழுப்பப்படும் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி பகலிரவு போட்டியாக இன்று(24) நடைபெறும் போட்டியை காண்பதற்கு வரும் ரசிகர்களை சோதனை செய்து மைதானத்திற்கு அனுப்புமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது.

போட்டியை காண வரும் ரசிகர்கள் நேரகாலத்துடன் வருகை தந்து ஆசனங்களில் அமர்ந்து கொள்ளுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

UGC தற்காலிகமாக மூடப்பட்டது

wpengine

எஸ்.பீ மற்றும் தயாசிறி ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இல்லை…

wpengine

ஒரே நாளில் 878 பேருக்கு தொற்று : இருவர் பலி

wpengine