உள்நாட்டு செய்திகள்

இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) நாத்தாண்டிய அசோகபுர பிரதேசத்தில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் நேற்று(03) கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், மாரவில் பொலிஸார் சந்தேக நபருடைய வீட்டை நேற்று(03) சோதனை செய்தனர்.

இதுதொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரயில்வே திணைக்களம் விசேட அறிவிப்பு

News Editor

தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மாறுகிறது.

wpengine

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் தீ

wpengine