Top Story 3உள்நாட்டு செய்திகள்

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று(29) அறிவிக்கப்படவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறைந்தபட்ச பேரூந்து பயணக் கட்டணத்தை 2 ரூபாயினாலும், ஏனைய கட்டணங்களை 10 சதவீதம் அளவில் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரூந்து பயண கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம், பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதை விடவும், டீசல் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

டீசல் மானியம் வழங்காவிட்டால், 14 ரூபாயாக உள்ள ஆகக்குறைந்த பேரூந்து கட்டணத்தை 20 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய கட்டணங்கள், 20 சதவீதமளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய விஜயத்தில் பசில் ராஜபக்ஷ

wpengine

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

wpengine