Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்க‍ை எதுவும் விடுக்கப்படவில்லை.

No description available.

No description available.

 

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கைதைத் தடுக்க ஆதரவாளர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு

wpengine

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை..!

wpengine

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி கையளிப்பு

wpengine