Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

“இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் பொருளாதாரத்தின் தவறான முகாமைத்துவமே”

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல, பொருளாதார தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

இது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி (Man made crisis) என்றும் இதன் காரணமாக வெளிநாட்டுக் கடன் பாரியளவில் குவிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 மற்றும் 2022 க்கு இடையில் இலங்கையில் வறுமை 13.1 வீதத்தில் இருந்து 25 வீதமாக இரட்டிப்பாகியுள்ளது என்றும் இந்த வருட இறுதிக்குள் (2023) வறுமை மேலும் 2.4 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர் வறுமையின் அதிர்ச்சியை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

துபாயில் கைதான மாத்தறை ‘ஜங்கா’ வீட்டில் இருந்து துப்பாக்கி ரவைகள் 23 மீட்பு..

wpengine

பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முன்னால் அரச ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

wpengine

அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியது ஏன்? மக்களின் பிரச்சினைகளை அவசரமாக தீர்க்காமல் – சபையில் சஜித்

News Editor