உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் கிராமம் ஒன்றுக்கு சீல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 26 பேரும் 14 நாட்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் உரிய சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

இலங்கைப் பெண்ணிற்கு சவூதியில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படும் – சுமந்திரன்

wpengine

அரசாங்கப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்…

wpengine

கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

News Editor