உலக செய்திகள்

இஸ்ரேலினால் அனுப்பப்பட்ட´Beresheet´ விண்கலம் நிலவின் பரப்பில் மோதி விபத்து..

(FASTNEWS|COLOMBO) – உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலினால் அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ´Beresheet´ என்னும் அந்த விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் விண்கலன்களே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.நா பொது சபையின் முன்னாள் தலைவரான ஜான் ஆஷ் மரணம்

wpengine

ஃபுளோரன்ஸ் சூறாவளி – பெருமளவில் மக்கள் வெளியேற்றம்…

wpengine

டெல்டாவை எதிர்க்கும் ஜான்சன் & ஜான்சன்

wpengine