Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தியது சனல் 4 ஊடகம்..!

சனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர் என பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக நான் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானேன்.

மேலும் சனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால், இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சனல் 4 பற்றிய அந்தக் கடிதத்தின் வேலைகள் இன்று நிறைவடையும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதி வந்துள்ளார். எனவே, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி நாட்டில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறோம்.

பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக எனக்கு அனைத்து இன்னல்களையும் கொடுத்தார்கள். இப்போது நீங்கள் சனல் 4 ஐப் பார்க்கும்போது, ​​எல்லாமே வித்தியாசமாக தெரிவுதை நீங்களே பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். 

Related posts

மழையுடன் ஆழங்கட்டி பொழிவதற்கான சாத்தியம்…

wpengine

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்..

wpengine

வனிந்து ஹசரங்க T20 போட்டிகளில் விளையாடுவதட்கு தடையா..?

wpengine