Top Story 2உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைகின்றன.

இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையும் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளது.

Related posts

புதிய ஜனாதிபதி தெரிவுக்கு 20 ​ஆம் திகதி வாக்கெடுப்பு!

wpengine

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

wpengine

2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு இன்று..

wpengine