உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு…

(FASTNEWS|COLOMBO) –  நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “2019 – மாத்ய அருண” என்ற விஷேட கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த கடன் திட்டத்தின் கீழ் கடனை பெறும் ஊடகவியலாளர்கள் முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் பணிப்பாளர் ஊடகம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு “எஸிதிஸி மெதுர” இலக்கம் 163, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட,கொழும்பு- 5 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

madya aruna

Related posts

மகரகம பகுதியில் ரயில் தடம்புரள்வு..

wpengine

புதிதாக இடம்பெற்றுவரும் எரிபொருள் வர்த்தகம் குறித்து எச்சரிக்கை

News Editor

மின்சார சபையின் புதிய செயலி அறிமுகம்

wpengine