உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 5ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…

(FASTNEWS-COLOMBO) சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி எதிர்வரும் 5ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடுமுறை தினத்திற்கு பதிலாக பிரிதொரு தினத்தில் பாடசாலையை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத பணியாளர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை…

wpengine

எதனோல் இறக்குமதிக்கு இன்று முதல் தடை

wpengine

அரசியல் தலையீட்டால் போக்குவரத்து துறை அழிந்தது – அநுர

wpengine