வணிகம்

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சி இன்று ஆரம்பம்…

தொழில் முனைவோர் ஒரு இலட்சம் பேரை உருவாக்கும் பாரிய வேலைத்திட்டத்தின் கீழான ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ ‘கம்பெரலிய’ தேசிய கண்காட்சி இன்று(29) முதல் 31ம் திகதி வரை மொனறாகலையில் ஆரம்பமாகவுள்ளது.

‘மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் – ஆயிரம் அறுவடை’ என்ற தொனிப்பொருளில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் மொனறாகலை மாவட்ட செயலயகப்பிரிவில் இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியில் 12 வலயங்களாக 515 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய வர்த்தக முயற்சிக்கான அரசாங்கம் வட்டி செலுத்தும் கடன் முறையின் கீழ் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கு ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சி இடம்பெறும் ஒவ்வொரு நாள் இரவும் நாட்டின் பிரபலமான இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு…

wpengine

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம்  உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை… 

wpengine

வட்டக்கச்சியில் புதிய பால் குளிரூட்டல் நிலையத்தை திறந்துவைத்துள்ள நெஸ்லே

wpengine