உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடக்கையின்போது தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் 80 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, குறித்த கடற்பிராந்தியத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், படகில் பயணித்த 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

மன்னார் – பேசாளை பகுதியை சேர்ந்த 36 மற்றும் 39 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…

wpengine

சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை

wpengine

பொட்டு நௌவ்பரின் மனைவி STF ஆல் கைது…

wpengine