Top Story 3உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 103 நிறுவனங்கள் சிக்கலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்காமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையில் 2,680 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படாத 103 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

குறித்த காலப்பகுதியில் 910 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாள் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம்

wpengine

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்..

wpengine

“மாற்றம் என்பது மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவது மாத்திரமல்ல, நல்லாட்சியும் உருவாக வேண்டும்”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

wpengine