உள்நாட்டு செய்திகள்

கடல் எல்லையை மீறும் மீனவர்கள் மீது கடுமையான சட்டம்…

(FASTNEWS-COLOMBO) இலங்கை கடல் எல்லையை மீறும் வௌிநாட்டு மீனவர்கள் மீதான சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான 2 சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக, திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 15 இந்திய மீனவர்கள் 7 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய சட்டங்களின் அடிப்படையில் குறித்த 7 படகுகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை, இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீண்டும் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் மற்றும் சபாநாயகர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம்…

wpengine

பைசர் தடுப்பூசியும் இலங்கைக்கு

wpengine

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை

wpengine