உலக செய்திகள்

கடும் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு…

கடந்த நான்கு நாட்களாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது

மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பெய்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் சஹரான்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த கடும் மழையில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. வீடுகளை இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து வருவதாக என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழப்பு…

wpengine

அமெரிக்காவை சூறையாடிய சூறாவளி – 19 பேர் உயிரிழப்பு

wpengine

போயிங் தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார்…

wpengine