Top Story 1உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கட்டுநாயக்க  ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

காயமடைந்த நபர் முதலில் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related posts

தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான 03 உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine

கொவிட் 19 – தீவிரமாகப் பரவும் அபாய வலய நாடுகளில் இலங்கை

wpengine

சிம்பாபே அணிக்கு எதிரான நாளைய போட்டியிலிருந்து லசித் மாலிங்க விலகல்..

wpengine