உள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த விரிவுரையாளர்

கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த விரிவுரையாளர் ஒருவர் நேற்று(4) கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான கர்ப்பிணி பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த 35 வயதான சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை பெலிவுல்ஓய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பெண்ணால் சமனலவெவ பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து குறித்த விரிவுளையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும்போது முறையற்ற விதத்தில் பணம் பெறல் தடை..

wpengine

ரயில் சாரதிகள் 21ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்..

wpengine

கடன் எல்லையை மேலும் 1000 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கும் யோசனை நிறைவேற்றம்

wpengine