உள்நாட்டு செய்திகள்

காணிகளை அளவிட நாடுமுழுவதும் 41 GPS தொழிநுட்ப கோபுரங்கள்

பொது மக்களின் காணி தொடர்பான பிரச்சினையை தீர்க்க அவற்றின் உரிமையை அவர்களுக்கு உறுதி செய்வதற்கு காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைவாக 38 லட்சம் காணிகளை அளவீடும் பணிகளை இவ்வருடத்தில் பூர்த்தி செய்வதற்கு அரச நில அளவையாளர் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றின் தொழிநுட்பம் மற்றும் அரச மற்றும் தனியார் துறையினரின் நில அளவை திணைக்களத்தின் ஒத்துழைப்பும் பெற்று கொள்ளப்பட்டுள்ளதாக நிலஅளவையாளர் உதய காந்த தெரிவித்தார்.

நவீன நில அளவீடு உபகரணம் மற்றும் செய்மதி தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த அளவீடு நடவடிக்கை இடம் பெறுகின்றது. இதற்காக 41 ஜீபிஸ் தொழிநுட்ப கோபுரங்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 6 கோபுரங்கள் கொழும்பு இரத்தினபுரி கேகாலை கட்டான அவிசாவளை ஆகிய பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் குறித்த இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேல்மாகாணத்தில் 25லட்சம் காணியும் நாட்டின் ஏனைய மாகாணங்களில் 11லட்சம் காணிகளும் அளவிடப்படவுள்ளன.

#reeshma

Related posts

கடும் காற்றுடன் கூடிய காலநிலை…

wpengine

லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போகிறாராம்..?

wpengine

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

wpengine