Top Story 3உள்நாட்டு செய்திகள்

காற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்கிறது..!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு கரையை அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல காலகட்டங்களில் மழை பெய்யும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் விபத்துக்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு..!

wpengine

மஹிந்தானந்தவின் வழக்கு விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோனிடம்….

wpengine

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

wpengine