உள்நாட்டு செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிப்பு…

நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் சிறியளவில் மழை பெய்யக் கூடும் டின்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் 50மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, தென், மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது

Related posts

மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு…

wpengine

வற் வரி திருத்தம் குறித்த நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 11 அன்று..

wpengine

புதிய அமைச்சரவைக் குழு முதல் முறையாக இன்று கூடுகிறது…

wpengine