உள்நாட்டு செய்திகள்

காலி வீதியில் போக்குவரத்து மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிஸையில் இருந்து காலி வீதியூடாக சுதந்திர சதுக்கம் வரையில் இன்று(25) பிற்பகல் 1 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அமரபுர பிரிவின் உன்னத மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு போக்குவர்த்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இன்று (25) பிற்பகல் 1 மணிக்கு அவருடைய உடல் கல்கிஸ்ஸ தர்மபால விகாரையில் இருந்து வாகன பேரணி ஊடாக எடுத்துவரப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே வாகன சாரதிகள் குறித்த தருணத்தில் மாற்று வீதிகளின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதுஷ் உயிரிழப்பு

wpengine

அதிகார சபையின் அனுமதியின்றி விலையை உயர்த்தினால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் ரிஷாத்

wpengine

உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் – சாணக்கியன்..!

wpengine