உள்நாட்டு செய்திகள்

குப்பைகள் குறித்து எந்தப் பொறுப்பும் தமது அமைச்சிக்கு வழங்கவில்லை – சம்பிக்க

குப்பைகள் குறித்து எந்தவொரு பொறுப்பும் தமது அமைச்சிடம் ஒப்படைக்கப்படவில்லை என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குப்பைகளை முறையாக சேகரித்தல் மற்றும் அவற்றை மீள் சுழற்சி செய்தல் போன்ற பொறுப்புக்கள் தமது அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பொறுப்பான அமைச்சராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வௌியாகியுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், இது தொடர்பில் எந்தவொரு பொறுப்பும் தனது அமைச்சிடம் இதுவரை கொடுக்கப்படவில்லை என, சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேல் மாகாணத்தில் குப்பைகளை சேகரித்தல் மற்றும் அவற்றை மீள் சுழற்சி செய்தல் போன்ற பொறுப்புக்கள் மாகாண முதலமைச்சர் வசம் ஜனாதிபதியால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

 

(rizmira)

Related posts

தூத்துக்குடி – இலங்கை: கப்பல் போக்குவரத்து மார்ச் மாதம் ஆரம்பம்..!

wpengine

ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

wpengine

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine