உள்நாட்டு செய்திகள்

குருநாகல் நகர முதல்வர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO ) – குருநாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் வழக்கொன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்சீவ எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகிய போது விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்ர உத்தரவிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு குருநாகல் கீழ் ஹேவாபொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை தாக்கி துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இவர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related posts

வாகன வருமான அனுமதிப் பத்திரம் – செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

wpengine

எதிர்கட்சி தலைவர் தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

wpengine

பிரித்தானிய அமைச்சரின் இலங்கைக்கான பயணம் இரத்து..

wpengine