Uncategorized

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

50,000 வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலங்சூரிய குறிப்பிடுகின்றார்.

வருட இறுதிக்குள் 50,000 வீடுகளை நிர்மாணித்து முடிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வீடுகளுக்கான 50,000 பயனாளிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களின் 25,000 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

தேசபந்து தென்னகோனை தாக்கிய மற்றுமொரு சந்தேகநபர் கைது

News Editor

இந்த அரசில் சில அமைச்சர்களுக்கே மெய்பாதுகாவலர்கள் இல்லாத நிலையில் முன்னாள் M.P சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் ஏன்?

Azeem Kilabdeen

வளர்ப்பு நாய் கணவனுக்கு கொடுத்த பதிலடி

wpengine