உள்நாட்டு செய்திகள்

கேரள கஞ்சா கடத்திய ஒருவர் கைது…

கல்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது
கேரள கஞ்சா கடத்திய நபரொருவரை , பொலிசார் நேற்று(24) கைது செய்துள்ளனர்.

4 பொதிகளில் 8 கிலோ 281 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கஞ்சா தொகையை கடத்த பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியும் காவற்துறையின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

41 வயதுடைய சந்தேகநபர் நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, , கொலன்னாவை பிரதேசத்தில் கொழும்பு குற்றவியல் பிரிவில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 10 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

43 வயதுடைய தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Related posts

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine

கடந்த 24 மணிநேரத்தில் 54 பேர் கைது

wpengine

இலங்கையிலும் அணு மின் நிலையம்

wpengine