Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா : இது மூன்றாவது அலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று(18) காலை ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஆகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு இடையில் கொரோனா இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சிலர் வருகை தந்ததாகவும், கடற்படை நடைவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேரும் நேற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை(22) மற்றும் நாளை மறுதினம் (23) அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை..

wpengine

கொச்சிக்கடையில் நீர் குழியில் விழுந்து ஒருவர் பலி

Azeem Kilabdeen

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை

wpengine