Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனா கோரத்தாண்டவம் – அமெரிக்காவில் ஒரே நாளில் 2482 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –  அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.

இது அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், இதுவரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிகபட்ச உயிரிழப்பாகும்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 644,348 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 30 ஆயிரத்து 206 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,554 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,084,042 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்த கொடிய வைரஸ் பரவியவர்களில் இதுவரை 515,090 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு இதுவரை 134,669 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டு வாகனங்கள் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு இடைநிறுத்தம்..

wpengine

எத்தியோப்பிய கலவரத்தில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு.. (VIDEO)

wpengine

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்விக்கு கொரோனா

wpengine