ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா நபரால் பதற்றம்! 8 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியில் சீனர்களுடன் தங்கி இருந்த நபருக்கு கொரோனா சந்தேகத்தின் காரணமாக குறித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உள்பட கொரோனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக வைத்தியசாலை பகுதியில் பதற்ற நிலமையேற்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு சென்ற நிலையில் அங்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெறச் சென்றுள்ளார்.

இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நபராகவும் இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியூலன்ஸை மறித்து வைத்தியசாலையினை சூழவுள்ள பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

43 ஆக அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும்..?

wpengine

OIC வேண்டாமெனக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் பாதையில் படுத்து ஆர்ப்பாட்டம்.. (Photos)

wpengine

அவுஸ்திரேலியா தலைநகரை விட்டு வெளியேரும் மக்கள் [PHOTOS]

wpengine