உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றால் 43 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,185 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 20 பெண்களும் 23 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அம்பகமுவ உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்திற்கு எதிராக மனுத் தாக்கல்…

wpengine

சோள இறக்குமதிக்கு இலங்கை அரசால் அனுமதி

wpengine

உமா ஓயா திட்டத்தை மீள் ஆரம்பிக்க கவனம்

wpengine