உள்நாட்டு செய்திகள்

கொஸ்கம வெடிப்பு – அடிப்படை விசாரணைக்காக இராணுவ நீதிமன்றத்தை நிறுவ தீர்மானம்

கொஸ்கம – சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரிக்க, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துக்கு காரணமான விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட தேசிய பாதுகாப்புச் சபையின் பணிப்புரைக்கு அமைய இராணுவத் தளபதியினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சவூதி அரசு எச்சரிக்கை..

wpengine

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் -விற்பனை செய்யும் இடங்கள் இன்று(18) முதல் விசேட பரிசோதனைக்கு..

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine