உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார்.

சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரஷ்ய விமானம் குறித்து நாமல் வெளியிட்ட ட்வீட்டர் பதிவு

wpengine

காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை…

wpengine

கங்காராம பெரஹெரா’வினை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம்…

wpengine