Top Story 2உள்நாட்டு செய்திகள்

கோப் குழு இன்று கூடுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று (26) முதற் தடவையாக ஒன்லைன் முறையில் நடத்தப்படவுள்ளது.

குறித்த கூட்டத்தில், களனி கங்கை நீர் மாசடைவது பற்றிப் பேசுவதற்காக அதிகாரிகளை இணையத்தின் ஊடாக தொடர்புபடுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்கடி காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய நேரடி வருகைகளைக் குறைத்து, குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கில் ஒன்லைன் முறைமை பயன்படுத்தப்படுகிறது.

Related posts

நாவலப்பிட்டியில் கைதான 15 பேருக்கு பிணை..!

wpengine

டெல்லியில் 4.2 ரிக்டர் பதிவில் நில அதிர்வு..

wpengine

லொஹான் ரத்வத்த இராஜினாமா

wpengine