உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸின் மனு ஆகஸ்ட் 1௦ வரை ஒத்துழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன சார்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்தமை மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அடிப்படை உரிமை மீறல் என அறிவிக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சார்ப்பில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சஜின் வாஸ் குணவர்தன, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணை இன்று திங்கட்கிழமை (03) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யவதற்கு  சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

(riz)

Related posts

நாளை குறித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்…

wpengine

PTA இற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெறுகின்றது..!

wpengine

“தானே நாட்டின் பிரதமர்” – மஹிந்தவின் பேச்சிற்கு பிரதமர் பதிலடி..

wpengine