உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(FASTNEWS|COLOMBO) – சட்டவிரோதமாக கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

கோதுமை மா அத்தியாவசிய உணவு பொருளாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் அதிகார சபையின் அனுமதியின்றி விலை அதிகரிக்கப்பட்டமை சட்டவிரோதமாகும் என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.பௌசர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

முதன் முதலாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கைப் பெண்

wpengine

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை ..

wpengine

2017ம் ஆண்டில் இடம்பெறவுள்ள பரீட்சைகளின் திகதிகள் வெளியீடு..

wpengine