உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

57 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாடு செல்வதற்கான அனுமதிப்பத்திரமோ அல்லது, வீசாவோ இன்றி காணப்பட்ட குறித்த இந்திய பிரஜை, நிலாவெளி மஸ்ஜின் வீதியில் நேற்று (16) கைது செய்யப்பட்டிருந்தார்.

திருகோணமலை நீதவான்  நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சந்தேகநபரை முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts

மனு தொடர்பிலான தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு கோரிக்கை..

wpengine

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர் விநியோகத் தடை …

wpengine

LTTE முன்னாள் தலைவி தமிழினியின் புத்தக வருமானம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு..

wpengine