Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சந்தையில் விற்பனையாகும் கத்திரிக்காய்கள் குறித்து எச்சரிக்கை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய ஆய்வில், சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதே பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உணவு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் பியும் டி.ஏ. அபேசுந்தர சுற்றுச்சூழல் நீதி மையத்திடம், காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினிகர் அல்லது உப்பு சேர்த்து கழுவுவதால் பூச்சிக்கொல்லிகளை நீக்க முடியும் என தெரிவித்திருந்தார்.

காய்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புற தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை எளிதில் அகற்ற முடியும் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனம் தீப்பற்றியது..

wpengine

அனல்மின் நிலையத்தில் டீசல் இல்லை; மின் வெட்டு ஏற்படும் அபாயம்

wpengine

பெரும் நிர்ப்பந்தம் காரணமாகவே குற்றவாளிகளுக்கும் வேட்புமனு வழங்கப்பட்டது – எஸ்.பி

wpengine